கம்பியூர் ஊர்க்கூட்டம் கார சாரமாக
நடந்துக் கொண்டிருந்தது.
‘கொலயூர் காரணும் ஈட்டியூர் காரணும்
ஒருத்தனை ஒருத்தன் குத்திகிட்டு சாவறதுக்கு கம்பியூர்தான் கிடைச்சுதா, இங்க
இருக்கிறவனுங்க எல்லாம் என்ன பொட்டை பசங்களா’
‘எல்லாத்துக்கும் காரணம் நம்ப ஊர்
பெரிசுங்க சரியில்ல’ இளைஞன் ஒருவன்
‘எல குறுக்கால் பூந்து ரெண்டு
கூட்டத்தையும் வெட்டி எரிஞ்சுருக்குனும், விட்டுபுட்டு இங்க உட்கார்ந்து
பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க’ மற்றொருவன்
‘எலெ, பெரியவங்க சிரியவங்க
வித்தியாசமில்லாம பேசிகிட்டு இருக்கீங்க,’ பெரியவர்
‘யோவ் பெரிசு, பொத்திகிட்டு சும்மா இரு,
நேத்து ராத்திரி தியேட்டர்ல நெருப்புல போயி பிள்ளைங்களயும், அடிபட்டவங்களையும்
காப்பாத்துனது எங்கள மாதிரி வயசு பசங்கதான், பஞ்சாயத்துன்னா மட்டும் வாயை
பொத்திகிட்டு நிக்கனுமா’ இளைஞன்
‘செத்தவங்களுக்கு என்ன பதில் சொல்ல
பொகுது இந்த பஞ்சாயத்து’ இன்னொருவன் கேட்டான்
‘என்ன நாட்டாண்மை சும்மா இருந்தா எப்படி’ வயதானவர்
நல்லமுத்து சற்று பீதியுடன்
அமரிந்திருந்தார். ‘சொல்லுங்கல, என்ன
செய்யனும்னு’ சுரத்தில்லாமல் பேசினார்.
நேற்று இரவு போலீஸ் ஸ்டேஷனில்
வாக்குமூலம் கொடுத்தது அவருக்கு பயமாகவே இருந்தது. இக்பால் நம்மளை குறி
வச்சுட்டானோன்னு சந்தேகப்பட்டார்.
டிஎஸ்பியிடம் முறையிட்டு வாக்குமூலம் தராமல் தப்பிக்கலாம் என்று
பார்த்தால், அவரை நெருங்கவே முடியவில்லை.
விநாயகத்திடம் பேசிப் பார்த்தும் பயனில்லை. இக்பால் சஸ்பென்ஷன் ஆகிவிட்டால் கொஞ்சம்
நிம்மதி. தியேட்டரில் வெடி குண்டு பதுக்கி வைத்ததாகவும் அதுதான் தீப்பிடிக்க
காரணம் என்று தானும் நம்புவதாக டிவியில் சொல்ல போய் இப்போது தேவையில்லாமல் வாயை
கொடுத்து மாட்டிக் கொண்டது போல் உணர்ந்தார்.
‘கவர்மெண்டுலருந்து என்ன குடுப்பாங்களாம்’ அவரின் சிந்தனையை சத்தம் கலைத்தது
‘தாசில்தார் இன்னைக்கு வர்ரார்,
வந்துதான் முடிவு பண்ணுவாங்க’ நல்லமுத்து
‘அவங்க முடிவு பண்ணட்டும், நம்ம முடிவு
என்ன’ கோபமாகவே வந்தது சத்தம்
‘ஆளுக்கு ஒரு லட்சரூபா வாங்கணும்’ இன்னொருவர்
‘இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருண்ணு
பொருத்துதான் தாசில்தார் முடிவு பண்ணுவார்’ நல்லமுத்து. ‘இன்ஸ்பெக்டர சஸ்பென்ட பண்ணூவங்கண்ணு வேர
பேசிக்கிறாங்க
‘ஏன், அவர ஏன் சஸ்பென்ட் பண்ணனும்,
அவராலதான் சாவு இத்தோட நின்னது’
‘அவரு என்னல பண்ணினாரு’ நல்லமுத்து
‘அவரு என்னல பண்ணல, நீர் எங்கல
போயிருந்தீங்க, அவர்தான் தீயணைப்பு படை வர்ரதுக்கு மின்னடி தியேட்டர்குள்ள போன
முதல் மனுஷன், அவர் போன தைரியத்துலதான் நாங்களும் பின்னால போனோம். எத்தனை பேர
காப்பத்தினோம்னு எங்களுக்குத்தான் தெரியும்’
‘நீர் வெளியில நின்னிகிட்டு டிவிக்கு
பேட்டி கொடுத்துகிட்டு இருந்தீரு’
‘அவனவனுக்கு முடிஞ்சதான் செய்ய முடியும்’ பெரியபாண்டி நல்லமுத்துவிற்கு வக்காலத்து
வாங்கினார்.
‘தெரியுதல, அடக்கி வாசிங்க’ ஒரு இளைஞன் ஆவேசமாக கத்தினான்.
‘செத்தவங்களுக்கு ஒரு லட்சம், அடி பட்ட
எல்லாருக்கும் ஐம்பதாயிரம், முடிவு பண்ணுங்க’
‘என்னய்யா சொல்றீங்க’ நல்லமுத்து கேட்டார்.
‘எங்களுக்கு சம்மதம்தான், இன்னும் கூட
கொடுத்தாலும் சரிதான். பொண்டாட்டி செத்தவனெல்லாம் திரும்ப கண்ணாலம் பண்ணிக்க
வேண்டாமா?’
நல்லமுத்து செல்போனையே பார்த்துக்
கொண்டிருந்தார். ஏன் இன்னும் செய்தி வரல,
என்று பீதியுடன் இருந்தார்.
‘பொணத்தை எல்லாம் ஒன்னா ஒரே ஊர்வலமா
கொண்டு போவனும்னு நான் வேண்டுகோள் வைக்கிறேன்’ பெரிய பாண்டியின் குரல் கேட்டு
நிதானத்திற்கு வந்தார் நல்லமுத்து
‘என்ன நாட்டாண்மை’ எல்லோரும் கேட்க
‘பொணத்துக்கு சொந்தக்காரங்க ஒத்துகிட்ட எனக்கு
சரிதான்’ நல்லமுத்து
‘இப்ப நடந்த பிரச்சனை போதாதுன்னு புதுசா
வேற பிரச்சனை கிளம்பனுமா’ பெரியவர் ஒருவர் கேட்டார். எல்லோரும்
அவரை திரும்பிப் பார்த்தனர்.
‘செத்து போனது பல சாதிக்காரங்க, ஒன்னா
எப்படி கொண்டு போகமுடியும்’ அவரே பதில் சொல்ல,
‘அதான’ என்று சலசலப்பு உருவானது.
‘என்ன பெரியபாண்டி எப்படி நீ வேண்டுகோள்
வைக்கமுடியும், நாட்டண்மையும் சரின்னு தலையாட்டுராரு’
‘இவனுக திருந்த மாட்டானுங்க’ என்றபடி ஒருசில இளைஞர்கள் அலுத்துக்
கொண்டனர்.
நல்லமுத்துவின் செல்போன் அலற எடுத்தார். ‘சொல்லு
காளி’
‘அண்ணன், எஸ்பி ஆபிசுல, இன்ஸ்பெக்டரோட
சஸ்பென்ஷன் ரெடியாயிடுச்சு, எஸ்பி கையெழுத்துக்காக வெயிட்டிங், டிஎஸ்பி கொஞ்ச
நேரத்துல இங்கேருந்து ல்ட்டரோட புறப்படுவாருன்னு பேசிக்கிறாங்க’
நல்லமுத்துவின் முகத்தில் உற்சாகம்
பிறந்தது. மாவட்ட எஸ்பி ஆபிசில் அங்கு
என்ன நடக்கிறது என்று வேவு பார்க்க காலையிலெயே காளியை அனுப்பிவிட்டார்.
‘பெரியபாண்டி, உன் வேண்டுகோள வாபஸ்
வாங்கனும், இப்ப இன்னொரு பிரச்சனை வேணாம்’ கூட்டம் கலையட்டும்’ என்று சொல்லியபடி, ‘ஏய் பெரியபாண்டி, இங்கால வா’ என்று அழைத்துக் கொண்டு தனியாக
நடந்தார்.
‘இக்பால் சஸ்பென்ட் ஆனாதான் நமக்கு நல்லது. இது வரைக்கும் போலீஸ் யார் மேலயும் ஆக்ஷன்
எடுக்குல காரணம் அவனுககுள்ளயெ பிரச்சனை.
இக்பாலுக்கு சஸ்பென்ஷன் வரலைன்னா, அவன் சும்மா இருக்க மாட்டான்.’ நல்லமுத்து சொல்லியபடி நடந்தார்.
‘அதுல உனக்கு என்னல பிரச்சனை’
‘என்னல கிறுக்குத்தனமா பேசுற, ஏற்கனவே
ஊருல யார்யார அரெஸ்ட் செய்யனும்னு லிஸ்ட் எழுதி வச்சுருக்கிறானுங்கல, யார் உள்ள போனாலும் பிரச்சனை நமக்குதான், மேல நம்பள சும்மா விடமாட்டானுங்க,
டிஎஸ்பி வந்ததுனால இன்னும் ஒன்னும் நடக்கல, பெரிய ஆபிசர் இருக்கும்போது இக்பால்
ஒன்னும் பண்ணக் கூடதுன்னு இருக்கிறான்’ நல்லமுத்து
‘அண்ணேன் எப்படியாவது இக்பால இன்னைக்கு
ஊரைவிட்டு அனுப்பிடனும், டிஎஸ்பியும் நம்ப பக்கம்தான், அப்படி நடக்குலனா?’
‘அவன தூக்கிட வேண்டியதுதான்’
************
‘வருஷா வருஷம் இதே எழவா போய்ச்சு,
ராத்திரி புல்லா தூக்கமெ இல்ல’ ஏகாம்பரம் புலம்பியபடி நாற்காலியில் அமர்ந்தார். ‘ஏய் கந்தசாமி, ஊர்க்காரனுங்க என்ன பண்ணப்
போறானுங்க, எப்ப பொணத்தை எடுப்பானுங்களாம்’
‘தாசில்தாருக்காக வெயிட் பண்ணிகிட்டு
இருக்கானுங்க ஏட்டய்யா, நிவாரணம் வாங்கமா எரிக்க மாட்டானுங்க’
‘ரத்தினம், யோவ்’ சத்தமிட்டார் ஏட்டு
‘என்ன ஏட்டய்யா’ அங்கிருந்தபடியே பதில் சொன்னார்.
‘ஸ்பெஷல் போர்சு எல்லாருக்கும் காலையில
சாப்படு அனுப்பிட்டியாய்ய, விநாயகம் சார் வந்திடுவார்’
‘அனுப்பிட்டேன் ஏட்டய்யா, ஆமாம் இந்த அரெஸ்ட் லிஸ்ட் ரெடி பண்ண
சொன்னாரே இன்ஸ்பெக்டர், வாரெண்ட் வாங்கறதுக்கு பார்ம் ரெடி பண்ணட்டுமா’
‘ரத்தினம் சும்மா இருக்க மாட்டியா, அவரே
போகப்போறாரம், இதுல அரெஸ்ட் வேற, எல்லா பயலும் ஒரு வாரத்துல வெளிய வந்துடுவானுங்க,
அவனுங்க மூஞ்சியில முழிக்கிறது யாரு’
‘ஏட்டய்யா, ஏதாவது புதுசா தகவல்
வந்திருக்கா’ கந்தசாமி மெதுவாகக் கேட்டான்
‘ஆயிடும்னு நினைக்கிறேன், இன்னும் எஸ்பி
சார் கையெழுத்து போடல, விநாயகம் சார்கிட்டதான் பொறுப்பு கொடுப்பாங்க அடுத்த
இன்ஸ்பெக்டர் வர வரைக்கும்’
‘இந்த மனுஷன் வந்ததிலிருந்து மூணு மாசமா
ஒரே டென்ஷன், வருமானமும் குறைஞ்சு போச்சு, நிம்மதியா ரெண்டு நாளு வீட்டுல இருக்க முடியல, சரி ஆகலன்னா?’ கந்தசாமி இழுத்தான்
‘கஷ்டம்தான் இந்த ஆளூ சும்மா இருக்க
மாட்டார், லிஸ்ட வச்சுகிட்டு ஒவ்வொருத்தனா பிடிக்க ஆரம்பிச்சுடுவாரு’ ஏகாம்பரம்
‘அத நினைச்சாத்தான் பயமாயிருக்கு, ரோட்டுல நடக்க உடமாட்டாணுங்க, மேலேருந்து வர்ர
வருமானத்துக்கு பிரச்சனை இல்லாம காப்பாத்துடா ஆண்டவா’ கையெடுத்து கூரையை நோக்கி கும்பிட்டான்
கந்தசாமி
‘வீட்டுக்காரம்ம வந்திருக்காங்கன்னு
கேள்விபட்டேன்’ ஏகாம்பரம்.
கந்தசாமியின் கண்கள் பளபளத்தது, ‘ஆமா, ராத்திரி
மூணு மணிக்கு கார்ல வந்தாங்க, பார்த்தேன், சந்தானம் தான் அட்ரஸ் சொல்லி அழைச்சுகிட்டு
போனான்’. கந்தசாமி
‘ஆளு எப்படி பார்த்தியா’ ஏகாம்பரம் எச்சில் வழிய கேட்டார்.
‘சூப்பரு ஏட்டய்யா அய்யோ, இப்படி ஒருத்தி
பொண்டாட்டியா இருந்தா, டூட்டியாவது மண்ணங்கட்டியாவது’
‘விவரத்த சொல்லுடா’ ஏகாம்பரத்தின் மீசை துடித்தது.
‘சும்மா தக்காளி பழம் மாதிரி, என்ன அழகு,
டவுன் பொம்பளைனா, டவுன் பொம்பளதான், என்ன நடை, என்ன அழகு, முண்ணூறு கிலோ மீட்டர் கார்ல
வந்தமாதிரியே தெரியல் அவ்வளவு பிரஷ்’
‘அப்புறம்’
‘அப்புறம் என்ன, கொஞ்சம் முகமெல்லாம்
அழுதமாதிரி இருந்துச்சு, ஆனா, ஏட்டய்யா, பார்ததுலேருந்து என்னால் அடக்க முடியல’
‘ஹும், இருக்காத பின்ன’ பெருமூச்சு விட்டார். ‘நான் பார்க்காம போயிட்டனே’ ஏகாம்பரம் ‘வாடகைக் கார்லய இவ்வளவு
தூரம் ஒத்தைக்கு வந்தது, தைரியமான பொண்ணுதான்’.
‘சொந்த கார் மாதிரி தெரியுது ஏட்டய்யா’
‘மனுஷன் ஒத்தையில இருந்தார், இப்ப
பொண்டாட்டியும் வந்து சேர்ந்திடுச்சு, நல்லதுதான் எதுக்கும் மேல சொல்லி ஒரு வலைய
போட்டு வைப்போம், ரொம்ப அடம் பிடிச்சா, கிளிய மேல அனுப்பி வேலய காட்டிப்புடுவோம்ல.’
***************
‘ஏன் இதுவரைக்கும் போலீஸ் எந்த ஆக்ஷனும்
எடுக்கல, யாரையும் அரெஸ்ட் பண்ணல’ செய்தியாளரின் கேள்விக்கு விநாயகத்திடம் உடனடியாக எந்த பதிலும் இல்லை.
யோசித்தார் ‘டிஎஸ்பி வந்தபிறகுதான் என்ன
ஆக்ஷன் எடுக்கப் போறோம்னு தெரியும்’ நிறைய பேர் இறந்து போனதுனாலயும், தியேட்டர்ல வெடிகுண்டு பதுக்கி
வச்சுருந்ததுனாலயும், இப்போதைக்கு தியேட்டர் ஓனரைதான் நாங்க கஸ்டடியில
எடுத்திருக்கிறோம்’
டிவி கேமராக்காள் முழுவதும் விநாயகத்தை
சுட்டுக் கொண்டிருந்தன.
‘அப்போ தியேட்டர்ல வெடிகுண்டு பதுக்கி
வச்சுருந்தது உண்மையா?’
‘தடய விசாரணை முடிஞ்சபிறகுதான்
சொல்லமுடியும்’
‘இன்ஸ்பெக்டர் இக்பால்தான் மிகவும் போராட
நிறைய பேர காப்பத்துனதா மக்கள் பேசிக்கிறாங்களே’
‘அது எனக்குத் தெரியாது, நாங்க வந்தப்ப
அவர் அங்க இல்ல, எங்க இருந்தாருனு எங்களுக்குத் தெரியாது, நீங்கதான் சொல்றீங்க
அவர் தியேட்டர்ல எல்லாரையும் காப்பத்திக்கிட்டு இருந்ததா’
‘அவர சஸ்பென்ட் செஞ்சாச்சுன்னு சொல்றாங்க’
கேள்வி முடிவதற்குள் இக்பாலின் ஜீப்
வேகமாக வந்து நின்றது. விநாயகத்தைவிட்டு செய்தியாளர்களும், டிவி கேமராக்களும்
ஜீப்பை விட்டு இறங்கும் இக்பாலை சுற்றிக் கொண்டணர்.
கம்பீரமான தோற்றம், உயரம், கூட்டத்தை
நின்று பார்த்த விதம், அசத்தலான பார்வை, மடிப்பு கலையாத சீருடை, எல்லாம் சேர்ந்து
செய்தியாளர்களையும் அங்கு கூடியிருந்தவர்களையும் அவனை நோக்கி கவர்ந்தது. இப்போதுதான் அவனை அவர்கள் முழுதாகப்
பார்த்தார்கள். வேகமாக அவனை நெருங்கினார்கள்.
‘சார் உங்கள சஸ்பென்ட் செஞ்சிட்டுதா
பேசிக்கிறாங்க’
கையைத்தூக்கியதும் கேள்வி பாதியிலேயெ நின்றது. ‘உங்க கேள்விக்கெல்லம் இன்னும் இரண்டு மணி
நேரத்துல பதில் கிடைக்கும்’ சொல்லியபடி ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.
‘ஏகாம்பரம்’ சத்தமிட, வேகமாக வந்தார்.
‘இன்னும் பத்து நிமிஷத்துல உங்க எல்லோரட
ஏசிஆர் பைல் எல்லாம் எடுத்து கார்ல வய்யுங்க’
‘அய்யா...’ என்று இழுத்தவரை, ‘என்னய்யா இழுக்குற,
சொல்றத உடனே செய்’ ஏகாம்பரம் கலகலத்துப் போய் நகர விநாயகம் எதிரில் வந்து அமர்ந்தார்.
‘இக்பால், நீங்க சஸ்பென்ட் ஆகப் போறீங்க’
அவரை முறைத்துப் பார்த்தான் ‘ஆர்டர நீங்க
பாத்திங்களா விநாயகம்’
‘இல்ல... டிஎஸ்பி’
‘சொன்னாரா?’
எச்சிலை விழுங்கினார் விநாயகம். ‘டிஎஸ்பி வந்தபிறகு நீங்க என்ன ஆக்ஷன்
வேணுமுனாலும் எடுக்கலாமே’
‘இது என் ஸ்டேஷன், நான் தான் இன்சார்ஜ்,
என்ன செய்யனும், எப்ப செய்யனும்னு எனக்குத் தெரியும், நீங்க எனக்கு உதவி
செய்யத்தான் வந்திருக்கீங்க, உத்தரவு போட வரல, முடிஞ்சா உதவி செய்ங்க, இல்லண்ணா
வெளிய போங்க’
‘இக்பால் நானும் ஒரு இன்ஸ்பெக்டர், மரியாதயா பேசுங்க’
‘என்னய்யா இன்ஸ்பெக்டர் நீ,
நேத்துலேருந்து என்ன கிழிச்ச இங்க, உனக்கு டூட்டி சம்பவம் நடந்த இடத்துலயா இல்ல
இங்கயா’ விநாயகம் வாயடைத்துப் போனார்.
இக்பாலின் மொபைல் சத்தமிட்டது. எடுத்தவன் விநாயகத்தைப் பார்த்தான் ‘கொஞ்சம்
வெளிய இருக்கீங்களா, this is confidential call’ என்றதும் மெதுவாக அவர் எழுந்து வெளியில் செல்லும் வரை அவரையே பார்த்தவன் ‘சாரி
கதவ சாத்திட்டு போங்க’ என்றான்.
*******************
ஸ்டேஷன் மிகவும் அமைதியாக இருந்தது. இக்பாலின் சஸ்பென்டை ஆவலாக எதிர்பார்த்த
அனைவரும் சோர்ந்துபோய் சோகத்துடன் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல்
ஒருவருக்கொருவர் சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். விநாயகம் வெளிரிப் போய் வெளியில் வந்ததைப்
பார்த்த ஏகாம்பரமும் கந்தசாமியும் சத்தமில்லாமல் எழுந்து தரையில் குனிந்தபடி
நின்றனர். விநாயகம் வேகமாக ஸ்டேஷனை விட்டு
வெளியேறினார்.
‘ஏட்டய்யா, சஸ்பென்ஷன் அவருக்கா, இல்ல
நமக்கா, எதுக்கும் மேல செய்தி அனுப்பி வச்சுடுங்க, அப்புறம் நம்ப தலை நசுங்கிடும்’ கந்தசாமி காதை கடித்தான்.
ஏகாம்பரம் கொண்டு வந்த பைல்கள்
அனைத்தையும் சந்தானத்தை அழைத்து ஜீப்பில் வைக்க சொன்னான். என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்க போகிறது
என்று தெரியாமல் வெலவலத்து போய் நின்றிருந்தார் ஏகாம்பரம்.
‘ஸ்பெஷல் போர்ஸ் இன்சார்ஜை ஸ்டேஷனுக்கு
வரச்சொல்லுங்க’ என்ற கட்டளையை கேட்ட ரத்தினம் வயர்லெஸ் மூலமாக செய்தி அனுப்பினார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்பெஷல் போர்ஸ்
ராம் வந்து விரைப்பாக சல்யூட் அடித்தார்.
‘ராம், கூடுதலா இருபது மென் வர்ராங்க,
அவங்கள வச்சுகிட்டு கிரிமேஷன் முடியற வரைக்கும் பாதுகாப்பு கொடுங்க, கிரிமேஷனுக்கு
முன்னால இறந்த எல்லோருக்கும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ங்க. எந்த அசம்பாவிதம் வராம பார்த்துக்கணும்,
ஏதேனும் unusual இருந்தா எனக்கு செல் போன்ல தொடர்பு
கொள்ளுங்க, ஸ்டேஷனலுருந்து எந்த கான்ஸ்டபிலும் உங்களுக்கு உதவிக்கு எடுத்துக்கக் கூடாது. you
need to use your own force only.’
‘யெஸ் சார்’
‘நீங்க போகலாம்....... ரத்தினம்’ சத்தமிட்டான்.
‘நான் எஸ்பி ஆபிசு வரைக்கும் போறேன்,
ஸ்டேஷன் இன்சார்ஜ் நீங்கதான், வர்ரவன் போரவன் எதுவா இருந்தாலும் எல்லாத்தையும்
உடனெ டைரியில எழுதி ரெக்கார்ட் பண்ணி வைக்கனும்.
‘ஏகாம்பரம்’ சத்தமிட்டான்.
‘சார்’ வந்து நின்றார்.
‘கலவரம் நடந்த இடம், தியேட்டர்
ரெண்டுக்கும் நீங்கதான் இன்சார்ஜ். விநாயகம் சாரும் அங்கதான் இருப்பார். தீயணைப்பு படையோட இன்ஸ்பெக்ஷன் முடியற
வரைக்கும் அதுக்குள்ள போறதுக்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அவர் சொன்னாரு இவரு
சொன்னாருன்னு யாரும் உள்ள போகக்கூடாது. அத்துமீறி யாரும் முயற்சி பண்ணினா, ஸ்பெஷல்
போர்ஸ் ராம் கிட்ட இன்பார்ம் பண்ணுங்க, அவர் பார்த்துப்பார், கூட தெவைக்கு எத்தனை கான்ஸ்டபிள் வேணுமோ
அத்தனை பேர வச்சுகங்க, டூட்டி ரெக்கார்டுல எல்லோர பெயரையும் பதிவு பண்ணிடனும்’
‘சரிங்க சார்’ சொல்லிவிட்டு வெளியெறினார்.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவனை மீண்டும்
பத்திரிக்கையாளர்கள் சுற்றிக் கொள்ள
‘எஸ்பி என்னை கூப்பிட்டுருக்கார், வந்த
பிறகுதான் எந்த சேதியாக இருந்தாலும் உங்களுக்கு கிடைக்கும், தயவு செய்து நீங்க போகலாம்’ என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறினான்.
விநாயகம் சற்று தூரத்தில் தனது ஜீப்பில்
அமர்ந்தபடி இக்பால் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்ன சார், இவன் என்ன இவ்வளவு பெரிய ஆளா, இவன சஸ்பென்ட் பண்றதுக்கு இவ்வளவு
பார்மலிட்டியா, ஏன் இவ்வளவு தயங்கறீங்க, எதுவா இருந்தாலும் முளையிலேயெ கிள்ளி
வைக்கனும், இல்லன்னா ஆபத்து நமக்குத்தான்’ விநாயகம் விருத்தச்சலத்திடம் பொருமி கொட்டினார். ‘என்னயே
வெளிய போவ சொல்லிட்டான் சார், என் சர்வீஸ் வயசு இருக்குமா இவனுக்கு’ அழாத குறையாக பேசினார்.
‘லட்டர் டைப் பண்ணி ரெடியா எஸ்பி டேபில
இருக்கு, அவன் இங்கதான வர்ரான், எஸ்பியே அவர் கையில கொடுத்துடுவார், நீங்க கொஞ்சம்
பொறுமையா இருங்க, அவன் புறப்பட்டாச்சா’
‘ஆன், இப்பத்தான் புறப்பட்டான், பிரச்சனை
மேல போயிடமா பாத்துகங்க, அப்புறம் யாருக்கும் நல்லதுல்ல, அப்புறம் இன்னொரு விஷயம்,
அவன் பொண்டாட்டி வந்திருக்கா, சேதியெ மெல சொல்லிட்டேன்’ போனை வைத்தார் விநாயகம்.
(தொடரும்)